திருச்சி சமயபுரம் நால்ரோடு பகுதியில் பொரி கடையில் வேலை பார்த்த தொழிலாளி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தியதில், அவர் துறையூர் அருகே உள்ள ஓமாந்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த காமராஜ் (வயது 38) என்பது தெரியவந்தது. அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.