Rock Fort Times
Online News

மோட்டார் சைக்கிளில் சென்றவரிடம் வழிப்பறி செய்தவர் கைது….

திருச்சி நம்பர்-1 டோல்கேட் கீழத் தெருவை சேர்ந்தவர் காந்திராஜ் (வயது 47). இவர் திருவானைக்காவல் கன்னிமார்தோப்பு பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த வாலிபர் ஒருவர் இவரை வழிமறித்து கத்திமுனையில் அவரிடம் இருந்த பணத்தையும், மோட்டார் சைக்கிளையும் பிடுங்கி கொண்டு தப்பி சென்று விட்டார். இதுகுறித்து காந்திராஜ் கொடுத்த புகாரின்பேரில், ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதனைத்தொடர்ந்து காந்திராஜிடம் வழிப்பறி செய்ததாக ஸ்ரீரங்கம்
சிங்கர்கோவில் தெருவை சேர்ந்த முருகானந்தம் (வயது 24) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து பணம், மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்