Rock Fort Times
Online News

இட்லி கடையில் சிலிண்டரில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு…! 

திருச்சி பாலக்கரை வைக்கோல் மேட்டு தெருவில் இட்லி கடை நடத்தி வருபவர் கருணைமணி. வழக்கம்போல இன்று அவர்  டிபன் தயார் செய்து கொண்டிருந்த போது சிலிண்டரில் கேஸ் தீர்ந்து விட்டது. இதனால் கருணைமணி புதிய சிலிண்டரை மாற்றியுள்ளார். அப்போது சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. அப்போது கடையில் பணியாற்றிக்
கொண்டிருந்த 2 பெண்கள் கடையை விட்டு வெளியில் ஓடி வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதன் காரணமாக இந்த கடையின் அருகே உள்ள வங்கி மற்றும் அலுவலகங்கள் ஒரு மணி நேரம் தாமதமாக திறக்கப்பட்டன. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனா்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்