Rock Fort Times
Online News

அண்ணாமலை குறித்து அவதூறு: தொழிற்சங்க நிர்வாகி மீது போலீசில் புகார்..

திருச்சி திருவெறும்பூரில் உள்ள பாய்லர் ஆலையில் கடந்த 14- ம் தேதி வாயிற் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட பெல் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளர் பரமேஸ்வரன், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாய்லர் ஆலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலவேணியிடம், பா.ஜ.க. மாவட்ட ஊடக பிரிவு தலைவர் இந்திரன், திருவெறும்பூர் வடக்கு மண்டல் தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர். இந்த மனு மீது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்