Rock Fort Times
Online News

திருச்சி அருகே நூலக உதவியாளர் தற்கொலை…

திருச்சி மாவட்டம் தாளக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட வாழக்கட்டை திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் ராஜகுரு (வயது 50). இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவர் திருச்சி சட்டக் கல்லூரியில் நூலக உதவியாளராக பணியாற்றி வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு ஆஞ்சியோ அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பணிக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்த நிலையில் தன்னால் பணிக்குச் செல்ல முடியவில்லையே என மன உளைச்சலில் இருந்து வந்த அவர் நேற்று ( 29.05.2023 ) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்