திருச்சி காந்தி மார்க்கெட் வடக்கு தாராநல்லூர் காமராஜ் நகரை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகள் லாவண்யா (வயது 15). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் மன அழுத்தத்தில் இருந்த லாவண்யா வீட்டு மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவலின் பேரில் காந்தி மார்க்கெட் இன்ஸ்பெக்டர் கருணாகரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாவண்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.