சென்னை கோயம்பேடு சீமாத்தம்மன் நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்த காவலர் சுகந்தி (25) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரத்தை சேர்ந்த சுகந்தி, கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு காவலராக பணியாற்றி வந்தார். இவரும், காவலர் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். அவருடன் வீடியோ காலில் பேசியபோது, தற்கொலை செய்து கொள்ளப் போவதாக சுகந்தி கூறியுள்ளார். காவலர் சுகந்தி தற்கொலைக்கான காரணம் குறித்து கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.