திருச்சி பெரிய மிளகு பாறை ஆதி திராவிடர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது47). எலக்ட்ரீசியன். இவர் செல்வநாயகர் காந்தி தெரு பகுதியில் ஒரு வீட்டில் எலக்ட்ரிக் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின் வயரை தொட்டதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. அந்த வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி மீனா அளித்த புகாரின் பேரில் செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.