Rock Fort Times
Online News

திருச்சி விமான நிலையத்தில் ரூ.84 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்.. 

மலேசியாவிலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை ( 21.05.2023 ) இரவு தனியார் விமானம் ஒன்று திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆண் பயணி ஒருவர் தனது பேண்ட் பாக்கெட் மற்றும் மின்னணு சாதனங்களுக்குள் மறைத்து ரூ. 67 லட்சம் மதிப்பிலான 1,091 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதே போல அதே விமானத்தில் வந்த மற்றொரு பயணி ரூ. 13.70 லட்சம் மதிப்பிலான 279 கிராம் தங்கத்தை கடத்தி வந்திருந்தார். அந்த தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் மேற்கண்ட 2 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரிடமிருந்தும் மொத்தம் ரூ. 84.19 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்