Rock Fort Times
Online News

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை பிப்.18 திருச்சி வருகை : * அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிக்கை…!

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திமுக இளைஞர் அணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரிய சூரியூரில் அமைய உள்ள ஜல்லிக்கட்டு மைதான அடிக்கல் நாட்டு விழா மற்றும் தெற்கு மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு திருமணங்களை நடத்தி வைக்க நாளை (18-02-2025) செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணி அளவில் விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தர உள்ளார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க தெற்கு மாவட்ட திமுக சார்பில் முடிவு  செய்யப்பட்டுள்ளது. இதில் மாநில, மாவட்ட, மாநகர கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்,  வட்ட, கிளை கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் , மாமன்ற உறுப்பினர்கள், அனைத்து அணியை சேர்ந்த அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், கழகத் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்