பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதும், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாக விளங்கும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலுக்கு திரிபுரா மாநில ஆளுநர் இந்திர சேனா ரெட்டி நல்லு தனது குடும்பத்தினருடன் இன்று(17-02-2025) வருகை தந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கோவிலில் உள்ள கருடாழ்வார் சன்னதி, மூலவர் பெரிய பெருமாள் சன்னதி, தாயார் சன்னதி உள்ளிட்ட சன்னதிகளுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவில் நிர்வாகம் சார்பாக அவருக்கு பெருமாள் புகைப்படம் மற்றும் பெருமாள் சந்தன அபய ஹஸ்தம் ஆகியவற்றை கோவில் இணை ஆணையர் மாரியப்பன், தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர், கண்காணிப்பாளர் வேல்முருகன் ஆகியோர் நினைவு பரிசாக வழங்கினர்.
Comments are closed.