Rock Fort Times
Online News

மீண்டும் வந்துட்டேன்டா மாப்ள…! தமிழகத்தில் 7 நாட்கள் வெயில் அதிகரிக்கக் கூடும் – வானிலை ஆய்வு மையம்…

வெயில் சீசன் தொடங்கி விட்டது. வழக்கத்தை விட இந்த ஆண்டும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது; இன்று 17-02-2025 மற்றும் நாளை 18ம் தேதி ஆகிய இரு தினங்கள் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2- 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். மேலும் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். இதேபோல 19ம் தேதி முதல் முதல் 21-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒருசில இடங்களில் அதிகபட்சவெப்ப நிலை இயல்பை விட 2 -3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். 22- ம் தேதி மற்றும் 23- ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என கூறியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்