திருச்சி கருமண்டபம் பகுதியில் இயங்கி வரும் அரசுடைமையாக்கப்பட்ட வங்கி ஒன்றில் உள்ள குளிர்சாதன பெட்டியில் இணைக்கப்பட்டுள்ள காப்பர் கம்பிகள் நேற்று திருடப்பட்டது. இதுதொடர்பாக வங்கியின் மேலாளர் சரவணன் கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், வங்கியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். இந்த திருட்டு தொடர்பாக தாராநல்லூர் அலங்கநாதபுரம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.