சிக்கிம் மாநிலம் லச்சேன் பள்ளத்தாக்கு பகுதியில் திடீரென மேகவெடிப்பு நிகழ்ந்தது. இதனால் அங்கு பேய் மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தீஸ்தா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 23 ராணுவ வீரர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்கள் சென்ற வாகனமும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ராணுவ வீரர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.