அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் மற்றும் தேசிய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் இன்று ( 4-10-2023 ) ஒருநாள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. கிராமப்புற அஞ்சல் ஊழியர்களுக்கு 8 மணி நேர வேலை வழங்கி பென்ஷன் உள்ளிட்ட இலாகா ஊழியர் அந்தஸ்து வழங்கிட வேண்டும். பதவி உயர்வு, பணிக்கொடை உயர்வு மற்றும் இன்சூரன்ஸ், மருத்துவ காப்பீடு உள்ளிட்டவைகளை வழங்கிட வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்டத்தில் 115 கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனா். இந்தப் போராட்டத்தினால் அஞ்சலகங்களில் தபால்கள் மற்றும் பார்சல்கள் மூட்டை, மூட்டையாக தேங்கி கிடந்தன. பார்சல்களை எடுத்துச் செல்லும் அஞ்சல் துறை வாகனங்களும் அலுவலகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

Comments are closed, but trackbacks and pingbacks are open.