பெண் கொடுத்த புகார் மீது விசாரணை நடத்தாத இன்ஸ்பெக்டா் உட்பட 2 போ் பணியிட மாற்றம்…
திருச்சி மாவட்ட எஸ்.பி. வருண்குமார் நடவடிக்கை...
திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை பகுதியை சேர்ந்தவர் முத்தாத்தாள். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒருவரிடம் வீடு விலைக்கு வாங்குவது தொடர்பாக ரூ.8 லட்சம் கொடுத்து ஏமாந்துள்ளார். இது தொடர்பாக முத்தாத்தாள் பெட்டவாய்த்தலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால், அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மனம் உடைந்த முத்தாத்தாள் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 25-ந்தேதி நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்க வந்தபோது, தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இதைத்தொடர்ந்து முத்தாத்தாள் மனு மீது முறையாக விசாரணை நடத்தாத ஜீயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி, பெட்டவாய்த்தலை சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரம் ஆகிய இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றி திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வீ.வருண்குமார் ஐபிஎஸ் உத்தரவிட்டார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.