Rock Fort Times
Online News

திருச்சி மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர் திடீர் ராஜினாமா- தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு…!

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று(13-03-2024) மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் திவ்யா தனக்கோடி, ஆணையர் சரவணன் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்கள் வார்டு பிரச்சனைகள் குறித்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது 60-வது வார்டு திமுக கவுன்சிலரும், திமுக முக்கிய பிரமுகருமான காஜாமலை விஜய் எழுந்து, தனது வார்டில் எந்தவித பணிகளும் மேற்கொள்ளப்படாததால் தனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்து அதற்கான கடிதத்தை மேயரிடம் கொடுத்தார். அப்போது அவர் என்னுடைய வார்டில் இனியும் பணி நடக்கவில்லை என்றால் தீக்குளித்துக் தற்கொலை செய்து கொள்வேன் என்று சொல்லிவிட்டு வேகமாக கூட்ட மண்டபத்தை விட்டு கீழே வந்தார்.

 

அவர் எங்கே தீக்குளித்துவிடுவாரோ என்ற அச்சத்தில் கவுன்சிலர்கள் அவரை சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் அவர் அதை ஏற்காமல் கீழே இறங்கி காரில் இருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து வந்து தனது உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். அவரை தீக்குளிக்க விடாமல் சக கவுன்சிலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் தடுத்து நிறுத்தி காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் திருச்சி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்