திருச்சி, காஜாமலை ஆர்.பி.எஃப் அருகில், மத்திய அரசுக்கு சொந்தமான மத்திய உணவு சேமிப்புக் கிடங்கு செயல்பட்டு வருகிறது. சுமார் 90 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த உணவு சேமிப்பு கிடங்கிலிருந்து வெளிவரும் பூச்சிகளால் அப்பகுதியை சுற்றி இருக்கும் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என அப்பகுதி குடியிருப்பு சங்கங்கள் திருச்சி எம்பி துரை வைகோவிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து மத்திய உணவு தானிய சேமிப்பு கிடங்கு அதிகாரிகளுடன் பேசிய திருச்சி எம்பி நேரடியாக அதிகாரிகளுடன் இன்று(10-05-2025) சி.டபுள்யூ.சி குடோனில் ஆய்வு நடத்தினார். அப்போது குடோனில் மழைநீர் சேமிப்பு அமைப்புகள் கொண்டு வருவதற்கான நடவடிக்கையும், லாரிகள் லோடு ஏற்றி இறக்கும்போது அருகில் உள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் பிரத்தியேக பார்க்கிங் வசதிகள் செய்து தரவும், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில்உணவு தானியங்களில் இருந்து வெளிவரும் பூச்சிகளை கட்டுப்படுத்த பெர்டிலைசர் மூலம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என மத்திய உணவு தானிய சேமிப்பு கிடங்கு அதிகாரிகள் உறுதி அளித்தனர். இவற்றில் எதையெல்லாம் உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வர முடியுமோ அதையெல்லாம் செய்து தர அதிகாரிகள் தயாராக உள்ளனர். நானும் இவற்றை தொடர்ந்து கண்காணித்து மக்கள் சிரமத்தை குறைப்பேன் என துரை வைகோ தெரிவித்தார்.
Comments are closed.