திருச்சி -சென்னை பைபாஸ் பகுதியிலுள்ள சஞ்சீவி நகர் மற்றும் திருவானைக்கோவில் ஒய் ரோடு ஆகிய இடங்களில் அதிக விபத்துகள் ஏற்படுகிறது. இதை தடுக்க அப்பகுதிகளில் சர்வீஸ் ரோடு அமைப்பது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை துறையினருடன் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ பேச்சுவார்த்தை நடத்தினார். இதுதொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு திருச்சி எம்பி அலுவலகத்தில் இன்று(10-05-2025) நடைபெற்றது. அப்போது இதுதொடர்பாக பேசிய எம்.பி துரை வைகோ, சஞ்சீவி நகர் மற்றும் திருவானைக்கோவில் ஒய்.ரோடு ஆகிய இடங்களில் சர்வீஸ் ரோடு அமைய உள்ள தெளிவான வரைபடத்தை தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சுமார் 80 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராக உள்ள சர்வீஸ் ரோடு, அதிகபட்சமாக 18 மாதங்களில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அப்போது கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் டாக்டர் ரொகையா, மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ் மாணிக்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.
Comments are closed.