Rock Fort Times
Online News

வெள்ள நிவாரண நிதி ரூ.2000 கோடி மத்திய அரசு வழங்க உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு…!

கடந்த ஆண்டு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதிக கன மழை பெய்தது. இதன் காரணமாக நான்கு மாவட்டங்களும் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டன. மேலும் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களிலும் அதீத கனமழை பெய்து மக்களை நிலைகுலைய வைத்தது. இதனால், இந்த மாவட்டங்களில் பெரும் இழப்பை சந்தித்த தமிழக அரசு வெள்ள நிவாரணம் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர், மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். ஆனால், தமிழக அரசு கேட்ட தொகையை மத்திய அரசு இன்னும் வழங்கவில்லை. இந்நிலையில், தமிழகத்துக்கான வெள்ள நிவாரண நிதியை வழங்காவிட்டால் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேலூர் பிரச்சார கூட்டத்தில் தெரிவித்து இருந்தார். அதன்படி, தமிழக அரசு கோரிய ரூ.2,000 கோடி நிவாரண நிதியை மத்திய அரசு வழங்க உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்