தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்கான விடுதியில் சமைக்கும் முறையை மாற்றி அமைக்கும் விதமாக தமிழ்நாடு அரசு சென்ட்ரல் கிச்சன் என்னும் முறையை அறிமுகம் படுத்துகிறது. இதன் மூலம் மாவட்டம் தோறும் ஒரு சமையல் கூடம் என்ற அடிப்படையில் மாவட்டங்களில் உள்ள அனைத்து விடுதிகளுக்கும் ஒரே இடத்தில் உணவு சமைத்து கொண்டு செல்லும் சென்ட்ரல் கிச்சன் முறை தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் என கூறப்படுகிறது.இத் திட்டம் அமலுக்கு வந்தால் மாணவர்களின் அன்றாட உணவு முறையிலும், அவர்களின் கால நெறிமுறைகளிலும் பல்வேறு சிக்கல் ஏற்படும். மேலும் மாணவருக்கு அளவு சாப்பாடு என்ற கட்டுப்பாடும் ஏற்படக்கூடும். எனவே மாணவர்களின் நலனுக்கு எதிராக தமிழ்நாடு அரசால் கொண்டுவரப்பட்டுள்ள விடுதிகளுக்கான சென்ட்ரல் கிச்சன் திட்ட முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கம் சார்பில் திருச்சி எடமலைப்பட்டி புதூரில் நேற்றிரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சூர்யா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜி .கே .மோகன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.
Comments are closed.