சென்னை வடக்கு மண்டல காவல்துறை போக்குவரத்து இணை ஆணையராக பணியாற்றியவர் மகேஷ் சக பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இவர் மீது பெண் காவலர்கள் புகார் அளித்தனர். இது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அந்த கமிட்டியின் விசாரணையில் பெண் காவலர்களுக்கு இணை ஆணையர் மகேஷ் குமார், பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது. இதையடுத்து மகேஷ் குமாரை பணியிடை நீக்கம் செய்து டிஜிபி உத்தரவிட்டார். இந்நிலையில் தமிழகம் முழுவதும் போலீஸ் உயரதிகாரிகளின் அலுவலகங்கள் மற்றும் முகாம் அலுவலகங்களில் பணியாற்றும் பெண் போலீசாரை உடனடியாக வேறு பணிக்கு மாற்றுமாறு தமிழக காவல்துறையில் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன்படி எஸ். பி முதல் ஐ.ஜி வரையிலான காவல் அதிகாரிகளின் அலுவலகம் மற்றும் முகாம் அலுவலகங்களில் பெண் போலீசாரை பணியில் அமர்த்த கூடாது. அவ்வாறு அங்கு தற்போது பணியாற்றும் பெண் போலீசாரை உடனடியாக வேறு பணிகளுக்கு மாற்றவும் அனைத்து மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
Comments are closed.