தமிழக தர்காக்கள் பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் அல்தாப்உசேன் தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் ஏ.ஆர்.லியாகத் அலி வரவேற்றார். கூட்டத்திற்கு ஜூபேர், நூருல்லா, அப்துல் ரகுமான், அப்பாக்குட்டி, அக்பர், கலந்தர் பஷீர், அப்துல் சுக்கூர், ஜெய்லானி, தண்டபாணி, காஜாமலை ஜான், தர்கா சர்தார், எஸ்.கே. ஜி. ரபீக், மயிலம்பட்டி ஹரபுத்தூர், இப்பு, முகமது பீரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நாகூர் தர்கா முதன்மை டிரஸ்டி பரம்பரை கலிபா டாக்டர் மஸ்தான் சாகிப் பேரவை மாநில கவுரவ தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்துக் கொள்வது, திருச்சி மாநகர சாலைகளை விரைவில் சரி செய்து தார் சாலைகளாக மாற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், திருச்சி தென்னூர் அனார் பாக் தர்காவை விரைவில் சரி செய்து தர வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தர்காக்களுக்கு மானியத்தை அரசு உயர்த்தி வழங்கிட வேண்டும், உலமாக்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன முடிவில் மாநில துணைத்தலைவர் அப்துல்சலாம் நன்றி கூறினார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.