Rock Fort Times
Online News

திருச்சி டிஎஸ்பி தனுசியா உட்பட 15 போலீஸ் அதிகாரிகளுக்கு முதல்வரின் சிறப்பு பதக்கங்கள் அறிவிப்பு…!

2026-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, புலன் விசாரணை மற்றும் பொதுச் சேவையில் சிறந்து விளங்கிய தமிழகத்தைச் சேர்ந்த 15 காவல் துறை அதிகாரிகள் மற்றும் சார்நிலை அலுவலர்களுக்கு தமிழக அரசின் சிறப்புப் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

1.  சி. ஜெயஸ்ரீ, காவல் துணை கண்காணிப்பாளர், கும்மிடிபூண்டி உட்கோட்டம், திருவள்ளூர் மாவட்டம்.

2.  நா. தமிழரசி, காவல் துணை கண்காணிப்பாளர், திருவள்ளூர் உட்கோட்டம், திருவள்ளூர் மாவட்டம்.

3.  கொ. அழகுராஜ், காவல் ஆய்வாளர், சைபர் கிரைம் காவல் நிலையம், கோவை மாநகரம்.

4.  ந.தனுசியா காவல் துணை கண்காணிப்பாளர், ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு, குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை, திருச்சி மாநகரம்.

5.  சே.லதா, காவல் ஆய்வாளர், தனி சிறுவர் காவல் உதவி பிரிவு, கோவை மாநகரம்.

6.  வி. கோமதி, காவல்துறை உதவி தலைவர், நிர்வாகம், காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம், சென்னை.

7. மா. சித்ரா, காவல் ஆய்வாளர், கைகளத்தூர் காவல் நிலையம், பெரம்பலூர் மாவட்டம்.

8.  ரா. வினதா, காவல் ஆய்வாளர், மேல்மலையனூர் காவல் நிலையம், விழுப்புரம் மாவட்டம்.

9.  கோ. மகாலெட்சுமி, காவல் ஆய்வாளர், மாவட்ட குற்ற பதிவேட்டு கூடம், சிவகங்கை மாவட்டம்.

10. ச. விஜயகுமார், காவல் துணை ஆணையர், மேற்கு, திருநெல்வேலி மாநகரம்.

இதே போன்று பொதுமக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய 5 காவல் அதிகாரிகள்/சார்நிலை அலுவலர்களுக்கு 2026-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான முதல்-அமைச்சரின் காவல் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.

1. டாக்டர் வி.சசி மோகன், இ.கா.ப. காவல்துறை துணைத்தலைவர், திண்டுக்கல் சரகம்.
2. தெ.சண்முக பிரியா. இ.கா.ப. காவல் கண்காணிப்பாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககம். மேற்கு சரகம், சென்னை.
3. சி.எம்.ஆர்.மணிமொழியன், துணை காவல் கண்காணிப்பாளர். தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை, சென்னை.
4. க.மதன் மோகன், காவல் ஆய்வாளர் (தொழில்நுட்பம்). மாநில காவல் தலைமை கட்டுப்பாட்டு அறை, சென்னை.
5. மு.ரவிக்குமார், தலைமை காவலர், கரூர் நகர காவல் நிலையம், கரூர் மாவட்டம்.
விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் வெகுமதியும் வழங்கப்படும். மேற்கண்ட விருதுகளை முதல்-அமைச்சர் விஜய் வழங்குகிறார்.

 

 

 

 

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்