ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடக்கும் முக்கிய விழாக்களுள் பங்குனி தேர் திருவிழாவும் ஒன்று. அந்தவகையில் பங்குனி தேர்த் திருவிழா கடந்த மார்ச் 18 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று(26-03-2024) காலை நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு
இன்று அதிகாலை ஏகாந்தசேவை முடிந்த பின்னர் நம்பெருமாள், சிறப்பு அலங்காரத்தில் தாயார் சன்னதியில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டார். காலை 7.30 மணிக்கு ரதாரோஹணம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து காலை 8-45 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ரங்கா…ரங்கா…. கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அனைத்து வீதிகளிலும் தேர் வலம் வந்து நிலையை அடைந்தது. தேரோட்டத்தை யொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தேரோடும் வீதிகளில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு நீர்மோர் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டன. தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.