Rock Fort Times
Online News

தமிழே தெரியாதவருக்கு நாம் தமிழர் கட்சியில் ‘சீட்’…!

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக, அதிமுக, பாரதிய ஜனதா தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டு கட்சிகள் களத்தில் இறங்கி உள்ளன.
சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி மட்டும் தனித்து போட்டியிடுகிறது. அந்தக் கட்சி தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்தி உள்ளது. அந்தவகையில் விருதுநகர் தொகுதியில் கௌசிக் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்வதற்காக தேர்தல் நடத்தும் அலுவலகம் சென்றார். அப்போது உறுதிமொழி வாசிக்க அறிவுத்தப்பட்டது. ஆனால், வேட்பாளர் கௌசிக்கிற்கு தமிழ் படிக்கத் தெரியாததால் உறுதிமொழி முழுவதையும் விருதுநகர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயசீலன் படிக்க, தொடர்ந்து படித்தார் நாம் தமிழர் வேட்பாளர் கௌசிக்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சி கூறுகையில், வேட்பாளர் கௌசிக் ஓமன் நாட்டில் படித்ததால் தமிழ் படிக்கத் தெரியாது என விளக்கம் அளித்தனர். நாம் தமிழர் என்ற பெயரில் கட்சி நடத்தும் சீமான் தமிழே தெரியாத ஒருவரை வேட்பாளராக நிறுத்தி இருப்பது விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்