மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள தனக்கன்குளம் ஜெயம்நகர் பகுதி மித்தல் நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். நில புரோக்கர். இவருடைய மகன் விவேக் (வயது 30). எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி ஷாலினி(25). பி.காம். பட்டதாரி. இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுடைய 2 வயது பெண் குழந்தை விசாகா. ஷாலினி 2-வது முறையாக கர்ப்பம் தரித்தார். சில மாதங்களாக விவேக் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் 4 நாட்களுக்கு முன்பு குழந்தை விசாகாவின் பிறந்தநாளை உறவினர்களுடன் கொண்டாடினர். அதன்பிறகு விவேக் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால் அதே பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மிகுந்த மனவருத்தத்துடன் ஷாலினி இருந்தார். இந்தநிலையில் தனது வீட்டின் அருகே உள்ள கிணற்றில் மகளுடன் ஷாலினி குதித்தார் .இதில் நீரில் மூழ்கி 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். இதுபற்றி தகவல் கிடைத்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி ஷாலினி , குழந்தையை மீட்டனா். இதுகுறித்து திருநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஷாலினிக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகள் மட்டுமே ஆவதால் சம்பவம் பற்றி ஆர்டிஓ மேல் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.