Rock Fort Times
Online News

திருச்சியில் சாலையில் கிடந்த ரூ.32 ஆயிரம் போலீசில் ஒப்படைப்பு !

திருச்சி தென்னூர் பஸ் நிறுத்தம் அருகில் டாஸ்மாக் கடை உள்ளது. அந்தக் கடை முன்பு 2 கட்டு ரூபாய் நோட்டுகள் கிடந்தன. அப்போது அந்த வழியாக சென்ற தில்லைநகர் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் அந்த பணத்தை எடுத்து தில்லைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகனிடம் ஒப்படைத்தார். அந்தப் பணத்தை போலீசார் எண்ணிப் பார்த்தபோது அதில் ரூ 32 ஆயிரம் இருந்தது. பணத்தை தவற விட்டவர் யார்? என்று உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. ரோட்டில் கிடந்த பணத்தை எடுத்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த முத்துக்குமாரின் நேர்மையை போலீசார் வெகுவாக பாராட்டினர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்