Rock Fort Times
Online News

பெரம்பலூர் அருகே வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்து கொண்டிருந்த தனியார் கல்வி நிறுவன ஊழியரிடம் இருந்து ரூ.2 லட்சம் பறிமுதல்…!

பெரம்பலூர் அருகே உள்ள தொண்டமாந்துறை கிராமத்தில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் பெரம்பலூர் மாவட்ட டாஸ்மாக் உதவி மேலாளர் துரைராஜ் தலைமையிலான பறக்கும் படையினர் நேரில் சென்று தொண்டமாந்துறையில் இன்று (16-04-2024) அதிகாலை பணப்பட்டுவாடா செய்து கொண்டிருந்த தனியார் கல்வி நிறுவன ஊழியர் இசைஅமுதா என்பவரிடமிருந்து ரூ.1லட்சத்து 95 ஆயிரத்து 500 ரொக்க பணத்தை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் திமுக வேட்பாளர் அருண்நேருவிற்கு வாக்களிக்கும்படி பணப்பட்டுவாடா செய்ததாக கூறப்படுகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்