Rock Fort Times
Online News

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி…அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு

மகாத்மா காந்தியடிகள் அமரத்துவ தினத்தை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில், திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை முன்பு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் “மத நல்லிணக்க உறுதிமொழி” ஏற்பு நிகழ்ச்சி இன்று (30-01-2024) நடைபெற்றது. கிழக்கு மாநகரக் கழக செயலாளர் மு.மதிவாணன் முன்னிலையில், இந்து சைவ, வைணவ குருக்கள், அர்ச்சகர்கள், கிராம கோவில் பூசாரிகள், கிறிஸ்தவ பாதிரியார்கள், இஸ்லாமிய இமாம்கள் உள்ளிட்டவர்கள் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.சேகரன், வண்ணை அரங்கநாதன், செந்தில், பகுதி செயலாளர் மணிவேல் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர,பேரூர், வட்ட கழக செயலாளர்கள், மாவட்ட, மாநகர அணி அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்