Rock Fort Times
Online News

கோவையில் நள்ளிரவில் பயங்கரம் : இன்ஜினியர் திருநங்கை சரமாரி வெட்டிக்கொலை…

கோவை வடவள்ளியில் இருந்து மருதமலை ரோடு செல்லும் பகுதியில் இந்திரா நகர் உள்ளது. இங்கு மாசி என்கிற திருநங்கை, அவரின் ஆண் நண்பர் மணியுடன் வசித்து வருகிறார். இந்தநிலையில், குன்னூரை சேர்ந்த மென்பொறியாளர் திருநங்கை தனலட்சுமி (வயது 39) என்பவருக்கு மாசியுடன் பழக்கம் ஏற்பட்டது.
தனலட்சுமி ஒரு மென்பொருள் நிறுவனத்தில் சீனியர் அனாலிஸ்டாக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில வாரங்களாக மாசியுடன் ஒரே வீட்டில் தனலட்சுமியும் வசித்து வந்து உள்ளார். இந்தநிலையில், நேற்று(29-01-2024) நள்ளிரவு மர்ம நபர்கள் தனலட்சுமியை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் அவர், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கோவை மாநகர தெற்கு துணை ஆணையாளர் சரவணகுமார், உதவி ஆணையர் ரவிகுமார் மற்றும் வடவள்ளி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கு கொலை செய்யப்பட்டு கிடந்த தனலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தனலட்சுமியை கொலை செய்தது யார்?, எதற்காக கொலை செய்தார்கள்?, முன் விரோதம் காரணமா? வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் திருநங்கை வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்