Rock Fort Times
Online News

திருச்சி அருகே கொத்தனாரை கொலை செய்ததாக சிறுவன் உள்பட 4 பேர் கைது…

திருச்சி மாவட்டம் மணிகண்டத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 43). கொத்தனார். இவர், அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவர் காதலித்து வந்த பெண்ணிடம் வீட்டில் அம்மா இருக்காங்களா என கேட்டுள்ளார். இதனை அறிந்த சதீஷின் அண்ணன் ஜெகதீசன், நாகராஜனிடம் சாமியாலபட்டி குளத்துகரை அருகே வைத்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது ஜெகதீசன் மற்றும் அவருடைய நண்பர்களான சிலம்பரசன், தீபக் மற்றும் 17 வயதுடைய சிறுவன் ஆகியோர் சேர்ந்து நாகராஜனை தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த நாகராஜனை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நாகராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், மணிகண்டம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து ஜெகதீசன் மற்றும் ஒரு சிறுவன் உட்பட 4 பேரையும் கைது செய்தனர்.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்