Rock Fort Times
Online News

மணப்பாறை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் தர்ணா போராட்டம்…

போலீசாருக்கும் - பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு...

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சீகம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பாரதியார் நகர்பகுதியில் சுமார் 70 நாட்களாக காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக அந்த பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று ( 30.09.2023 ) மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட சென்ற போது போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து பொதுமக்களுக்கும் , போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்படும் என்று கூறியதை அடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்