Rock Fort Times
Online News

மேட்டூர் காவலா் பயிற்சி பள்ளியில் 50 பேர் மர்ம காய்ச்சலால் பாதிப்பு…

சேலம் மாவட்டம், மேட்டூர் குள்ளவீரன்பட்டியில் காவலர் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட ஆண் காவலர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள். இவர்களில் 50-க்கும் மேற்பட்டவர்கள் திடீரென மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 15 பேர் மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 35 பேர் காவலர் பயிற்சி பள்ளியிலேயே தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்புக்காக பயிற்சி பள்ளி காவலர்கள் சென்று வந்துள்ளனர். அதன்பிறகு தான் அவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, அவர்களுக்கு வந்துள்ளது என்ன வகையான காய்ச்சல் என்பது ரத்த பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே தெரியவரும் என்று மருத்துவர்கள் கூறினர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்