Rock Fort Times
Online News

திருச்சி, கருமண்டபத்தில் பரபரப்பு : பெண் போலீஸ் தற்கொலை முயற்சி

திருச்சியில் பெண் போலீஸ் ஏட்டு விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி, கருமண்டபம் ஆர்எம்எஸ் காலனியில் வசிப்பவர் ராதிகா திருமணமான இவர், கடந்த, 2009-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்தார். தற்போது திருச்சி, கண்ட்டோண்மென்ட் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பணிமுடிந்து வீட்டில் இருந்த ராதிகா தோட்டத்திற்கு பயன்படுத்தக்கூடிய பூச்சி மருந்தை குடித்தார். இவர் விஷமருந்தியது குறித்து அறிந்த அவரது குடும்பத்தினர், உடனடியாக அவரை மீட்டு திருச்சி, பெரிய மிளகுபாறை கோரிமேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு ராதிகா தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இவருடைய தற்கொலை முயற்சிக்கு பணிநெருக்கடி காரணமா? அல்லது குடும்ப பிரச்சனை காரணமா? என்பது குறித்து செஷன்ஸ் கோர்ட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருச்சியில் பெண் போலீஸ் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சக போலீஸார் மத்தியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் உருவாக்கி உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்