திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க ஜெயலலிதா பேரவை சார்பில் அ.தி.மு.க.ஆட்சியில் நடைபெற்ற சாதனைகளை எடுத்து கூறி திண்ணை பிரச்சாரம் செய்யும் நிகழ்ச்சி இன்று( பிப்.14 ) நடைபெற்றது. நிகழ்ச்சியில், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் காட்டூர் குதிகளில் உள்ள வீடுகளிலும், கடைகளிலும் துண்டு பிரசாரங்களை விநியோகித்து அதிமுக அரசின் சாதனைகளை விளக்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் ராஜமணிகண்டன் மேற்கொண்டார். நிகழ்ச்சியில் அரியமங்கலம் பகுதி கழக செயலாளர் தண்டபாணி, மாவட்ட அவைத்தலைவர் அருணகிரி, மாவட்ட கழக துணை செயலாளர் .சுபத்ரா தேவி, ஒன்றிய செயலாளர்கள் இராவணன், கார்த்திக், நகர செயலாளர் எஸ்.பி.பாண்டியன், பேரூர் செயலாளர் பி.முத்துக்குமார், பகுதி செயலாளர்கள் பாலசுப்ரமணியன், பாஸ்கர் என்கிற கோபால்ராஜ், மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் அருண் நேரு, மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுரேஷ்குமார், மாவட்ட கலை பிரிவு செயலாளர் எம்.பி.ராஜா, மற்றும் மாவட்ட கழக, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி கழக நிர்வாகிகள், மற்றும் வட்ட கழக செயலாளர்கள், ஜெயலலிதா பேரவை சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட கட்சியினர் திரளாக பங்கேற்றனர்.
Comments are closed.