Rock Fort Times
Online News

வயல் வெளியில் மா்மமான முறையில் முதியவா் பலி..

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே வயல் பகுதியில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மர்மமாக இறந்து கிடந்த முதியவர் குறித்து விவரங்கள் தெரியவில்லை. இதனையடுத்து முதியவர் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் வயல்வெளியில் வைத்து கொலை செய்யப்பட்டாரா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்