Rock Fort Times
Online News

ஒடிசா மாநில தொழிலாளி திருச்சியில் பலி !

ஒடிசா மாநிலம் கஞ்சம் டீக்களி பகுதியைச் சேர்ந்தவர் பிருந்தாவன் பிரதான் (வயது 50) கட்டிட தொழிலாளியான இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தில் தங்கி வேலை செய்து வந்தார். அந்த தனியார் நிறுவனம் குண்டூர் அருகே கட்டுமான பணிகளை செய்து வருகிறது. இதில் வேலை செய்த பிருந்தாவன் சாரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் பிருந்தாவன் பிரதான் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.  இதுகுறித்து அவரது மனைவி ஊலி பிரதான் திருவெறும்பூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்