திருச்சி மாநகரில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து திருச்சி எடமலைப்பட்டி புதூர், ஏர்போர்ட் காவல் நிலையப் பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கஞ்சா விற்றதாக ராம்ஜி நகரை சேர்ந்த விஸ்வநாதன், கே. கள்ளிக்குடியை சேர்ந்த தீனதயாளன், ஏர்போர்ட் பகுதியைச் சேர்ந்த பட்டாபி ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் திருச்சி ஏர்போர்ட் ,திருவரங்கம், கோட்டை, காந்தி மார்க்கெட் ஆகிய பகுதிகளில் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்றதாக முஹம்மது அன்வர், கணேசன், ரமேஷ், சங்கர், குட்டி முனீஸ்வரன், அருண்குமார் ஆகிய ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகள் விற்றதற்கான ஆவணங்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.