Rock Fort Times
Online News

திருச்சி ஆர்.டி.ஓ ஆஃபிஸ் அருகே வியாபாரியிடம் நகை, செல்போன் அபேஸ்…!

மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் கைவரிசை

திருச்சி காட்டூர் கணேஷ் நகர்பகுதியை சேர்ந்தவர் வரதராஜன் (வயது 53 )கறிக்கடை வியாபாரி. திருச்சி ஓயாமாரி ஆர்.டி.ஓ அலுவலகம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்பொழுது இவரை ஒரே மோட்டார் சைக்கிளில் மூன்று பேர் பின் தொடர்ந்து வந்தனர். இந்நிலையில் திடீரென்று அந்த மர்ம ஆசாமிகள் வரதராஜனை வழிமறித்து வண்டியை நிறுத்தி அவர் கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் நகை மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டனர். இந்த சம்பவம் குறித்து வரதராஜன் கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கறிக்கடை வியாபாரியிடம் நகை செல்போனை திருடி சென்ற மூன்று மர்ம ஆசாமிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்