மனிதநேய ஜனநாயக கட்சி மாநில தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எம்.தமிமுன் அன்சாரி வழிகாட்டுதல்படி மனிதநேய ஜனநாயக கட்சி திருச்சி மாவட்ட இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் யாசர் ஷெரிப் தலைமையில், மாவட்டச் செயலாளர் பக்கீர் மைதீன் என்கிற பாபு, இளைஞர் அணி பொருளாளர் ஹம்ருதீன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட அலுவலகத்தில் 14.02.2025 அன்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞர் அணி செயலாளர் திருச்சி எம்.முஹமது ஷரிப் கலந்து கொண்டு இளைஞர் அணியின் அவசியம், கட்டமைப்பின் முக்கியத்துவம் மற்றும் செயலாற்ற வேண்டிய நோக்கம் குறித்து சிறப்புரையாற்றினார்.
அதனைத்தொடர்ந்து புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் இளைஞர் அணி சார்பில் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரம், அரசியல் பயிலரங்கம் மற்றும் இளைஞர் அணி உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடத்துவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் தர்வேஷ், அஸ்பாக், இளைஞர் அணி மாவட்ட துணைச் செயலாளர்கள் சாகுல் ஹமீத், சதாம் உசேன், முஹம்மத், அசார், சாதிக் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பஷாரத் நியாஸ்,ஷேக், ஜாக்கீர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.