Rock Fort Times
Online News

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம்…!

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும், இதற்கு கடுமையான சட்டங்களை அமல்படுத்த வலியுறுத்தியும் விமன் இந்தியா மூவ்மெண்ட் திருச்சி மாவட்டம் சார்பாக திருச்சி அரியமங்கலத்தில் மாவட்ட தலைவர் தெளலத் நிஷா தலைமையில் இன்று(15-02-2025) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொது செயலாளர் எஸ்.ஷமீனா பர்வீன் வரவேற்புரை ஆற்றினார். மாநில செயலாளர் எம் .மெஹராஜ் பானு மற்றும் திருச்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் அ.மசூதா மரியம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சியின் திருச்சி மாவட்ட துணைத் தலைவர் தளபதி அப்பாஸ் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.  ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் மூமினாபேகம், திருவெறும்பூர் தொகுதி தலைவர் பாத்திமா மற்றும் எஸ்டிபிஐ கட்சி திருச்சி தெற்கு மாவட்ட நிர்வாகிகள், தொகுதி, அணி நிர்வாகிகள், விமன் இந்தியா நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.  முடிவில் திருவெறும்பூர் தொகுதி செயலாளர் ரம்ஜான் நன்றியுரையாற்றினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்