Rock Fort Times
Online News

திருச்சியில் நீதிபதிகளுக்கான இலவச தியான பயிற்சி-இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது…!

திருச்சி நீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கான தியான பயிற்சி இன்று(19-03-2024) தொடங்கியது. இந்த தியான பயிற்சி 21ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கிறது.
தியான பயிற்சியை மாவட்ட நீதிபதி கே.பாபு மற்றும் தலைமை குற்றவியல் நீதிபதி என்.எஸ்.மீனா சந்திரா மற்றும் மூன்றாவது கூடுதல் நீதிபதி தங்கவேல் ஆகியோர் துவக்கி வைத்தார்கள். முதல் நாள் பயிற்சியை தமிழ்நாடு தலைமை பயிற்சியாளர் பிரகாஷ் அளித்தார். இந்நிகழ்வில் பயிற்சியாளர்கள் ராமசுப்ரமணியன், சங்கீதா மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி. வி. வெங்கட் செய்திருந்தார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்