Rock Fort Times
Online News

தேர்தல் பறக்கும் படையினர் சோதனை: திருச்சியில் ரூ.12 லட்சம் பறிமுதல்…!

தமிழகத்தில் அடுத்த மாதம் 19-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன.தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க திருச்சி மாவட்டத்தில் 81 பறக்கும் படைகள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இவர்கள் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.இதுதவிர நிலையான கண்காணிப்பு குழுவும் 14 சோதனை சாவடிகள் அமைத்து வாகன சோதனை நடத்தி வருகின்றன.இந்தநிலையில்
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பெரமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே பறக்கும் படை அதிகாரி வினோத் குமார் தலைமையிலான குழுவினர் நடத்திய சோதனையில் ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் சிக்கியது. கீரிப்பட்டியை சேர்ந்த சக்திவேல் என்பவர் உரிய ஆவணங்களை இல்லாமல் இந்த தொகையை எடுத்து சென்றுள்ளார். அதைத்தொடர்ந்து அந்த பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் மண்ணச்சநல்லூர் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.
இதேபோல, திருச்சி மன்னார்புரம் பஸ் நிறுத்தத்தில் ஒருவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்ற ரூ.1 லட்சத்து 7 ஆயிரம்
பறக்கும் படை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு திருச்சி மேற்கு தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பூவாளூர் கத்தரிக்காய் சாலையில் பிரபு தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியை சார்ந்த அஜித்குமார் என்பவர் தனது காரில் 50 ஆயிரத்து 500 பணத்தினை உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற போது பிடித்தனர். அந்தத்தொகை லால்குடியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்டிஓ சிவசுப்பிரமணியன் தாசில்தார் முருகன், தேர்தல் துணை வட்டாட்சியர் கார்த்திகேயன் ஆகியோரிடம் பறக்கும் படைத்தலைவர் பிரபு ஒப்படைத்தார். திருச்சி மாவட்டம் சமயபுரம் வெங்கங்குடி பேருந்து நிறுத்தம் அருகே, காரில் சாக்லேட் மற்றும் குளிர்பானங்கள் மொத்த விற்பனை செய்யும் மண்ணச்சநல்லூர் ராஜாஜி நகரை சேர்ந்த மூக்கன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.4,50,000 பணத்தை பறக்கும் படை அதிகாரி சித்ராதேவி தலைமையிலான குழு பறிமுதல் செய்தனர். இதேபோல் திருச்சி உய்யகொண்டான் திருமலை செக்போஸ்ட் பகுதியில் திருச்சி மேற்கு தாசில்தார் தலைமையிலான பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அப்போது உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2 லட்சத்து 84 ஆயிரத்து 300 பறிமுதல் செய்யப்பட்டது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்