Rock Fort Times
Online News

டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு…! (வீடியோ இணைப்பு)

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜில் கோலாகலமாக நடைபெறும் கும்பமேளாவில் நாள்தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராட வருகை புரிகின்றனர். டெல்லியிலிருந்து மகா கும்பமேளா நடைபெறும் பிரயாக்ராஜுக்கு செல்லும் ரயில்களில் ஏற காத்திருந்த பயணிகள் கூட்டம், ரயில் நிலையத்தின் 14 மற்றும் 15வது நடைமேடைகளில் அலை மோதியது. ரயிலில் ஏறக் காத்திருந்த பயணிகள், ரயில் வந்ததும் முண்டியடித்துக் கொண்டு ஏற முற்பட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கிய பயணிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, காயமடைந்த நபர்கள் அருகே இருந்த மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.  தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், ரயில்வே போலீசார், தீயணைப்புத்துறையினர், தேசிய பாதுகாப்பு மீட்புப் படையினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்நிலையில் டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் காயமடைந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதனை மருத்துவமனை வட்டாரத்தினர் உறுதிப்படுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்