Rock Fort Times
Online News

திருச்சி அரசு மருத்துவமனை சார்பில் தாய்ப்பால் விழிப்புணர்வு பேரணி…!

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1-ந் தேதி முதல் ஒருவார காலத்துக்கு உலக தாய்ப்பால் வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை குழந்தை பெற்ற தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணிகள் அறியும் வகையில் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை வலியுறுத்தும் வகையில் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில், கல்லூரி முதல்வர் நேரு தலைமையில் பேரணி நடைபெற்றது. மருத்துவ வளாகத்திலிருந்து புறப்பட்ட பேரணி, நீதிமன்றம் ரவுண்டானா வரை சென்று திரும்பியது. பேரணியில் தாய்ப்பால் வழங்குவதை ஊக்குவிப்போம் என்ற பதாகைகளை கையில் ஏந்தி மருத்துவ கல்லூரி மாணவிகள் மற்றும் செவிலியர்கள் கோஷமிட்டபடி சென்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்