திருச்சி வெள்ளைவெற்றிலைக்காரத்தெருவில் செயல்பட்டு வரும் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் வரும் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணி, திருச்சி மாநகராட்சி 19வது வார்டு திமுக கவுன்சிலர் எஸ்.கே.சாதிக் பாஷா தலைமையில் நடைபெற்றது.
இப்பேரணியை பள்ளி தலைமையாசிரியர் கொடியசைத்து துவக்கி வைத்தார். வெள்ளை வெற்றிலைக்காரத் தெருவில் தொடங்கிய பேரணி சுண்ணாம்பு கார தெரு, தெற்கு சுண்ணாம்புக்கார தெரு, சௌந்தரபாண்டியன் பிள்ளைத்தெரு மற்றும் நீத்துக்கார தெரு ஆகிய தெருக்களின் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. இப்பேரணியில், ஆசிரியர்கள், மாணவர்கள், பள்ளி கல்வி மேலாண்மை குழுவினர், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ‘அரசு பள்ளி ஆனந்த பள்ளி’, “பள்ளி வயது குழந்தைகளை பள்ளியில் சேர்த்து கல்லாமையை இல்லாமை ஆக்கிடுவோம்” போன்ற விழிப்புணர்வு வாசகங்களை கோஷமிட்டு வீடு வீடாக சென்று, அரசு பள்ளியின் சிறப்புகள் குறித்து எடுத்து கூறி, மாணவர்கள் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.