தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை இந்த முறை திமுக, அதிமுக, பாரதிய ஜனதா தலைமையில் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. ஏற்கனவே திமுக தனது கூட்டணியை இறுதி செய்து வேட்பாளர் பட்டியலையும் அறிவித்து விட்டது. அதிமுகவும் தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டது. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் மட்டும் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இடம்பெற்றுள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதற்கான ஒப்பந்தத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் கையெழுத்திட்டனர். இதேபோல, ஜான்பாண்டியன் தலைமையிலான தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.