திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள கிளியநல்லூர் வயநெய்வேலி குடித்தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் ராகுல் (வயது 24). இவர் இன்று தனது மோட்டார் சைக்கிளில் திருச்சியில் இருந்து தனது வீட்டிற்கு செல்வதற்காக திருச்சி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். மான்பிடிமங்கலம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது திருச்சியில் இருந்து நாமக்கல் நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று, மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த ராகுல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ராகுல் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.