கரூர் நகர காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட வெங்கமேடு காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் நெரூர் ரங்கநாதன்பேட்டை பகுதியைச் சேர்ந்த இளவரசன் (வயது 41). இவர், பணி நிமித்தமாக வெங்கமேடு காவல் நிலையம் அருகாமையில் உள்ள வாங்கப்பாளையம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து, தங்கி பணிக்கு சென்று வந்தார். அப்போது அவர், பிளஸ்-1 படித்து வரும் 16 வயது மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவியின் தாய், கரூர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலரிடம் புகார் அளித்தார். புகார் அடிப்படையில், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த கரூர் அனைத்து மகளிர் போலீசார், வெங்கமேடு காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் இளவரசனைக் கைது செய்தனர். போலீஸ்காரர் ஒருவர் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed.